தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேவராஜும் சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அக்கம் பக்கத்தினர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது டாக்டர்கள் பரிசோதித்து சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு 14 வயது தான் ஆகிறது என்பதை அறிந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.