கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சித்ரா குளித்துவிட்டு மின்விசிறியை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சித்ரா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் சித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.