அரியலூர் மாவட்டம் மேல சம்போடை கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பம் ஆகிய நிலையில் ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் துறையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.