வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை தொடங்கியது. இதில் டிடிவி தினகரன் தேர்தல் குறித்தும் அதற்கான பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தி அறிவுரைகள் கொடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களையும் முன் வைத்துள்ளனர்.