திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி, வேம்பு என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களது வயல்வெளியில் நெல் அறுவடை நடந்தபொழுது தனது தாயுடன் இரண்டு மகள்களும் சென்றுள்ளனர். அப்போது 30 அடி கிணற்றில் குளிக்க இருவரும் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேம்பு நீரில் மூழ்கியதை கண்ட தர்ஷினி அவரை காப்பாற்ற குதித்துள்ளார். அப்போது அவரும் நீரில் மூக்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.