மதுரை எம்.கே.புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர் நேற்று மாலை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திருமுருகனை குறி வைத்து சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த திருமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனே விரைந்த போலீசார் திருமுருகன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.