தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் நாசரேத்தை சேர்ந்த ஜான்சிராணி கீதா என்பவரை எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நாசரேத்தில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அந்தோணி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் கீதா வீட்டில் இல்லாததால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கீதாவின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை கொலை செய்து காட்டுப்பகுதியில் சடலத்தை போட்டுவிட்டு அந்தோணி ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.