திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள் யார்? எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.