தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மன்னார்குடி கோட்ட வேளாண் அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

இதில் விவசாயிகள் மற்றும் பல்நோக்கு சேவை இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீ ராமன், பொருளாளர் ரவிச்சந்திரன் துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய வேளாண் நிறுவன அணி தலைவர் அமுதன் வரவேற்று பேசியுள்ளார். இந்த முகாமில் தென்னிந்திய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விவேகானந்தம், இயற்கை விவசாயி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாய குழு அமைத்தல் பற்றி பேசி உள்ளனர்.