சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கு முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

முதியோருக்கு மாதம் 10 டோக்கன் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் சென்னையில் உள்ள 40 பணிமனை அலுவலகங்களில் இந்த டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.