திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், வளமயம் மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் தற்காப்பு பயிற்சிநர் குரு பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நன்றி தெரிவித்துள்ளார்.