தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் பெறலாம். ஏற்கனவே 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும். இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிய புதிய செயலை உருவாக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.