திருவள்ளூரில் நடந்து வரும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் புறக்கணித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூவை ஜெகன் மூர்த்தி. இவர் மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டு வந்த நிலையில், சீட் ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பேனரில் அவரது புகைப்படம் இடம் பெற்ற போதிலும், கூட்டத்தை ஜெகன் மூர்த்தி புறக்கணித்துள்ளார்.