நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவையில் இந்த முறை அண்ணாமலையை தோற்கடிக்க செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறை சென்றிருக்கும் செந்தில் பாலாஜி, கொங்கு மண்டலத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பதால் அவர் சிறையில் இருந்தாலும் பிரச்சாரக் களத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.