தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த சரக்கு பாட்டில்களுக்கு மத்தியில், வீரன் என தமிழில் இந்த மதுபான பாட்டில் வெளியாகியுள்ளது. இந்த வீரனுக்கு விலை ரூ.140ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த விலை மதுபானத்திற்கு குடிமகன்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழில் பெயர் வைத்ததை வரவேற்பதா? வீரன் என்ற பெயரில் புதிய மதுவகையை அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பதா? என்பது தெரியாமல் பலரும் விழிபிதுங்கி இருக்கின்றனர்.