அரசியல் கட்சித்தலைவர்கள் மக்கல்லவா தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

அரியலூரில் திருமாவளவனுக்காக பரப்புரை மேற்கொண்ட அவர், “தமிழகத்தின் இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு ஒரு பைசாக் கூட கொடுக்கவில்லை. கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார். ஆனால் 15 பைசா கூட கொடுக்கவில்லை. தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” எனத் தெரிவித்துள்ளார்