திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்ற 2 பேர் மரணம் அடைந்த நிலையில் தற்போது கனகராஜ் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.