கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் அவரை  வழி மறித்து நிறுத்தினார்.

அந்த வாலிபர் ஓட்டுநருடன் தகராறு செய்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து டிரைவர் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக நேசமணி நகர் காவல் துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட ஓட்டனரிடம் வந்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் இப்படி நடந்தது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.