திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை வாங்கிக்கொண்டு அவர்கள் காரில் கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செடிமுத்தூர் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் உயிரிழந்தார். ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.