சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனர். நேற்று முன்தினம் மீன் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீணவரான பிரபாகரனின் கால் வலையில் சிக்கியதால் அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் வலையை மேலே இழுத்து அவரை காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் மூச்சு திணறி பிரபாகரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரபாகரனின் உடலோடு கரை திரும்பிய மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.