சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும் டீக்கடையில் டீ குடித்துள்ளார்.

அப்போது 2 திருநங்கைகள் உட்பட 5 பேர் குருசாமியை மிரட்டி அருகில் இருந்த சந்திற்கு அழைத்து சென்று ஜிபே மூலம் மற்றொரு வங்கி கணக்கிற்கு 20 ஆயிரம் ரூபாயை அனுப்பி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து குருசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.