அரியலூர் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவரது 3-வது மகள் அரியலூரிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இந்த நிலையில் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் சென்ற 18/07/2022-ல் 9-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இன்று இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதோடு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடாக ரூபாய் 7 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.