சென்னை மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு மாமன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தின் போது ம.தி.மு.க உறுப்பினர் கோரிக்கை வைத்தபடி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன், நேற்று காலை 10 மணியளவில் பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் தொடங்கப்பட்டது. வழக்கமாக திருக்குறளுடன் தொடங்கும் கூட்டம், முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் நேற்று தொடங்கப்பட்டது.

இதனையடுத்து மறைந்த தி.மு.க கவுன்சிலர் ஷீபா வாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது 42-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் ரேணுகா பேசியுள்ளதாவது, சட்டமன்ற உறுப்பினர்கள்  பணிக்காலத்தில் இறந்தால் அவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மற்றும் அவரின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,000, பின் 5 ஆண்டுகளுக்கு பிறகு, மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆனால், மாமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும்  கிடைக்காத நிலையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

அதற்கு மேயர்,  ‘மாமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருக்கும் போது உயிரிழந்தால் மாநகராட்சி சார்பில் அவரது குடும்பத்துக்கு1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என்றார். பின்னர் துணை மேயர் மகேஷ் குமார், ‘மாமன்ற உறுப்பினர்கள் பதவி காலத்தில் இருக்கும்போது உயிரிழந்தால் 1 லட்சம் வழங்கப்படும் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ என கேட்டுக்கொண்டதன்படி, மேயரும் இதை முதல்-அமைச்சரின் சிறப்பு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்’ என உறுதி அளித்தார். இதன் பிறகு நாளை (மார்ச் 2)- ஆம் தேதி மாமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவித்து மேயர் கூட்டத்தை ஒத்தி வைத்தார். இறுதியில் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.