கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் திருவாதிரை கார்டன் பகுதியில் இரும்பு மொத்த வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மகனை கனடாவில் இருக்கும் கேட் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். இதனையடுத்து சென்னையில் சேர்ந்த இளங்குமரன் என்பவர் உங்களது மகனுக்கு கேப் பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதற்கு பணம் செலவாகும் என நாகராஜிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய நாகராஜன் தனது மகனுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 933 ரூபாயை இளங்குமரனிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்ட இளங்குமரன் கூறியபடி சீட் வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்துவிட்டார். இதுபற்றி நாகராஜ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளங்குமரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.