கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது உறுதியானது.

இந்நிலையில் வெள்ளையம்மாள், திட்டக்குடியை சேர்ந்த சின்ன பொண்ணு, போத்திரமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 3 அழகிகளை மேட்டு கடலூரில் இருக்கும் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.