தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அழகு ராஜாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் மனோஜ் பிரபாகர் உள்பட 5 பேர் எங்களுக்கு அதிகாரிகளுடன் பழக்கம் இருக்கிறது. பணம் கொடுத்தால் ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி அழகர் ராஜா, அதே பகுதியில் வசிக்கும் அவனாஷ், சத்தியசீலன், தாமோதரன் ஆகியோர் பல்வேறு தவணைகளாக 30 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து அழகராஜா உட்பட 5 பேரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர், மதுமோகன், அவரது மனைவி சுஜாதா, ரவி, ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.