சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி முன்னிலை வகித்துள்ளார்.

மேலும் இயற்பியல் துறை தலைவர் லொயோலா பவுல்ராஜ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் சகாயடெனிஸ் பாபு, திருச்சி தூய வளனார் கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ஜாய் பிரபு, ஆசிரியர் ஆல்பர்ட் மனோகரன் ஆகியோர் பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இயற்பியல் துறை தலைவர், உதவி பேராசிரியர்கள், திருமாமகள், நான்சி, அசோகன் மற்றும் மாணவ, மாணவிகள் செய்துள்ளனர்.