நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாகை மாலி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணன் பன்னீர்செல்வம் மற்றும் பொதுமக்கள் விவசாய தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி உள்ளனர். கீழையூர் ஒன்றியம் மேல பிடாகை கடை தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.