திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு ஆசிரமங்கள் இருக்கிறது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிரிவல பாதையில் இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த 2 இளம்பெண்களுடன் மும்பையை சேர்ந்த ரேபக்கா தக்கர்(40) என்பவர் ஆன்மீக சுற்றுலாவுக்காக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.

இவர்கள் தனியார் அறக்கட்டளை விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த 16-ஆம் தேதி அவர்கள் சேஷாத்திரி ஆசிரமத்தின் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெளி மாநில பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்த காஷ்மீரைச் சேர்ந்த முபாஷிர் ரஷீத் என்பவர் அவர்களை கேலி, கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக ரேபக்கா திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முபாஷிரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.