திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சாந்தி மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சாந்தியின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது அவரது உறவினர்கள் உடலை சாலையில் வைத்து சாந்தியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரண உதவி வழங்க முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.