நல்ல டவுன் பகுதியில் மாரியப்பன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மாரியப்பன் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து மாரியப்பன் உட்பட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.