ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம். பூண்டியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தேனியை சேர்ந்த மதுரை வீரனின் மகள் அர்ச்சனா தேவி தங்கி வேலை பார்த்து வந்தார் ஒரு மாதமாக அர்ச்சனாதேவி அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா தேவி தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஊருக்கு வர போவதாக தெரிவித்தார். இதனையடுத்து மறுநாள் காலை 10 மணிக்கு கம்பெனியின் உரிமையாளர் மதுரை வீரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அர்ச்சனா தேவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அர்ச்சனா தேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதுரை வீரன் தனது மகளின் சாவுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனமும், கார்த்திகேயன் என்ற வாலிபரும் தான் காரணம் என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.