ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லா பாளையம் ரோட்டில் விவசாய சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மருமகளும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக சுப்பிரமணியத்திற்கு பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்தது. இதனால் அவரது மகனும் கடந்த 10 வருடங்களாக சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருந்தார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.