நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதலியப்பன் கண்டி கரபிடகை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கோபிகா திருச்சியில் இருக்கும் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கரூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளருக்கு பயிற்சியும் பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிகா தனது அத்தை மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதனை அறிந்த தாய் கோபிகாவை கண்டித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகா தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.