கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடைக்காக்குழி சங்குருட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராபி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனை ராபி தட்டி கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த ராபியிடம் செல்வன் தகராறு செய்து கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கடுகாயமடைந்த ராபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.