ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிடாரியூர் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகணேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் செல்வகணேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்படி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள் கூறி செல்வகணேஷ் சிறுமியை நேரில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வகணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.