தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி பள்ளி பட்டி கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பி.கே.ராம ஜெயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமஜெயம் வி.பள்ளிப்பட்டியில் இருந்து சனத் குமார் ஆற்றுக்கு அருகே இருக்கும் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராமஜெயத்தின் மீது மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கநகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ராமஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.