கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாலையூர் காந்திநகர் மெயின் ரோட்டில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளையராஜா கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இளையராஜா குள்ளஞ்சாவடி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலப்பாக்கம் மெயின் ரோடு பள்ளி ஈரோடு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் இளையராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இளையராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.