அரியலூர் மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதி குபேரன் நகர் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுபாஷினி ராமலிங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சுபாஷினி பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சுபாஷினியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து சுபாஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுபாஷினியிடம் இருந்து தங்கநகையை பறித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் குமார், தரணி ஆகிய இரண்டு பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.