அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் வசித்து வருகிறார். அந்த மாணவர் அதே பகுதியில் வசிக்கும் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயதுடைய அந்த மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.