சேலம் மாவட்டத்தில் உள்ள மஞ்சினி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு கிருபாஷினி(4) புவஸ்ரீ( 5 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து சந்தியா தனது இரண்டு குழந்தைகளுடன் தென் செட்டியந்தல் கிராமத்தில் இருக்கும் மணிகண்டனின் பெரியப்பா வீட்டு கோவில் திருவிழாவிற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் திருவிழா முடிந்து சந்தியா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சந்தியாவையும், குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்த மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தியாவையும், குழந்தைகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.