கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் மாணவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதனை கேட்டதும் மனைவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதீஷ் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பிரதீஷ் அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

அந்த கடைக்கு சென்று வந்த போது பிரதீஷுக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரதீஷ் போலீசார் நடத்தி விசாரணையில் கூறியுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.