தேனி மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டி தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக தங்கப்பாண்டி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தங்கபாண்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.