தென்காசி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும்சவல் கிராமத்தில் பிச்சை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிச்சை பாண்டியின் மகன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததை முருகனும் அவரது தாய் கோமதியும் கண்டித்தனர். இதனால் கோபமடைந்த பிச்சை பாண்டி அவரது மனைவி முத்து, முத்துவின் சகோதரர்கள் பாக்கியராஜ், வைரமுத்து ஆகியோர் சேர்ந்து முருகன் மற்றும் கோமதியை தாக்கியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இருதரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.