தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பர் இரண்டாம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது