கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட் தேர்வால் அனிதா முதல் பைரவி வரை பலரது உயிர் காவு வாங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு அரசு இதுவரை எந்த ஒரு தீர்வும் எட்டவில்லை. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. இது போன்ற எண்ணங்கள் இருந்தால் 044-24640050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.