லஞ்ச ஒழிப்பு துறைக்கு சோதனையிடவும், கைது செய்யவும் அனைத்து அதிகாரமும் உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை  தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு நடந்த குரூப் – 1  தேர்வுகளில்  தமிழ் வழிக் கல்வியில்   பயின்றதற்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தான் இது போன்ற உத்தரவை மதுரை கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.