நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம் பறித்த  6 பேர்  கும்பல் கைது ஆறு பேர் கும்பல் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.   தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் மனோஜ்,  மாரியப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.வன்கொடுமை,  வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் மற்றும் அவருடைய நண்பரான மாரியப்பன். இருவரும் கடந்த 30 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் குளிப்பதற்காக சென்று   உள்ளார்கள்.  குளித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலானது பயங்கர ஆயுதலுடன் இவர்களை தாக்கி இவர்களிடத்தில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளார்கள்.

இது மட்டுமில்லாமல் அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்டு,  பட்டியலின சமூகம் என தெரிந்தவுடன் அவர்களை சரமாரியாக தாக்கியது மட்டும் இல்லாமல்,  அவர்கள் மீது சிறுநீர் கழித்து, அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்து சித்திரவதை செய்ததாகவும்,  அதற்கு பிறகு அவர்களிடம் இருந்து இரண்டு பேரும் தப்பி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீட்ட அந்த ஊர் மக்கள்,  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சியானது அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பட்டியலின மக்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் தச்சநல்லூர் போலீசில்  அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில்  பொன்னுமணி என்ற  நபர்தான், அவரின் நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டதாகவும்,  அவர்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிகிறது. அதனை தொடர்ந்து பொன்னுமணியை கைது செய்து,  அவர்களுடைய நண்பர்களான நல்ல முத்து,

ராமர், சிவா, லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரையும் தச்சநல்லூர் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது படுகாயம் அடைந்த இரு இளைஞர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி  வரும்நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற  கொடூரம் அரங்கேறியது மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

பாதிக்கப்பட்ட ஒரு இளைஞ்சர் பேசும் போது; 

நானும் என் பிரண்டு ஆத்துக்கு போனோம். ஒரு 7:30 மணிக்கு போற வழியில எப்போதும் போல போயிட்டு இருக்கும்போது..  அங்க நாலு பேரு கஞ்சா போதை அடிச்சிட்டு இருந்தாங்க. அவுங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது.  நாங்க வேலை  வீடுன்னா வீடு இப்படித்தான் இருந்தோம்.அவங்க கத்தி எல்லாம் வச்சு மிரட்டி பணம் வேணும் எனக்கு… கொடுக்கலானா  உங்களை குத்தி போட்டு விடுவேன் அப்படின்னு சொல்லிட்டு…

ஆத்துக்குள்ள கூட்டிட்டு போய்ட்டாங்க. கூட்டிட்டு போய் சட்டையை கழத்து,  பேண்ட்டை கழத்து, நீ என்ன ஜாதி ?  நீ SC தான … உன்னை கொல்லாம  விடமாட்டேன். பணத்தை கொடு இல்லைன்னு உன்னை கொன்னு போட்டு விடுவேன். அப்படின்னு ஜாதிய போட்டு சொன்னாங்க. என் மேல சிறுநீர் கழிச்சாங்க.உன்னை சும்மா விடமாட்டேன் என சொன்னாங்க. என் பிரண்டு,  என்னையும் கம்பு, கட்டையால்  அடி அடின்னு அடிச்சாங்க. முதுகுல கம்பு வச்சி அடிச்சாங்க.

நீ கேஸ் கொடுத்தாலும் உன்னை வெட்டிடுவோம்.  சும்மா விடமாட்டோம் அப்படின்னு சொன்னாங்க. நாங்க இதுவரைக்கும் அவங்க 4 பேரையும்  பார்த்ததே கிடையாது.  கூட ஒருத்தன் போன் அடிச்சு கூட 2 பேர் வந்தாங்க. மொத்தம் 6 பேரு வந்து நல்லா போதையில்  இருந்தது… எங்களை அடி அடின்னு அடிச்சு… கம்பால அடிச்சாங்க…. அடிச்சு தாக்கிட்டு….  இவன்கிட்ட இருந்து எப்படியாவது தப்பித்து போனேனும்ன்னு  டிரஸ் இல்லாமையே வீட்டு வரைக்கும் ஓடி விட்டோம்.

எங்க ரெண்டு பேரையும் துட்டு போட சொன்னாங்க. எங்க ரெண்டு பேரையும் அடிச்சு ஆளுக்கு 5000 போடு. இல்ல உங்க ரெண்டு பேரையும் உயிரோடு விடமாட்டோம். வெள்ளிக்கொடி, செல்போன், ஏடிஎம் கார்டு,  என் ஃப்ரெண்ட் வண்டி எல்லாத்தையும் கொண்டு போய்ட்டாங்க. கொண்டு போயிட்டு துட்டு போடலைன்னா விடமாட்டோம் அப்படின்னு சொன்னாங்க. என் பிரண்டு என்னுடைய ஏடிஎம்க்கு துட்டு போட்டு விட்டான்.  5000 ரூபாய்…  அப்புறம் ஏடிஎம்ல எடுக்க போனாங்க ரெண்டு பேரு. ஏன் என்னோட வெள்ளி செயின், பைக் எல்லாத்தையும் கொண்டுபோனாங்க

பாதிக்கப்பட்ட மற்றொரு இளைஞ்சர் பேசும் போது;

நாங்க எப்போதும் போல ஆத்துக்கு போயிருந்தோம். அப்ப வந்து கஞ்சா அடிச்சுட்டு இருந்தாங்க உள்ளே உக்கார்ந்து.. சட்டையை பிடித்து  எந்த ஊரு அப்படின்னு கேட்டாங்க. இந்த ஊருன்னு தான் சொன்னோம். அதுக்கு கத்தியை எடுத்து கழுத்துல வச்சு,  போன் எல்லாம் பிடுங்கி அடிச்சு… இங்க இருந்த கூட்டிட்டு போய்… தள்ளி கூப்பிட்டு போய் அங்க  வச்சி  அடிச்சாங்க. ஜாதி கேட்டு அடிச்சாங்க.  ஜாதிய சொன்ன உடனே ரொம்ப அடிக்க ஆரம்பிச்சாங்க. போன புடுங்கிட்டாங்க.  வெள்ளி  செயின்,  அருணா கொடி, ( 2 போன், அருணா  கொடி, 5,000 ரூபாய் பணம் )  புடுங்கிட்டாங்க. ஏடிஎம் கார்டு… மத்தபடி வேற எதுவும் கொண்டு போகல.

நாங்க குளிக்கணும்னு போனோம்.  ஆத்துக்கு குளிக்க போயிட்டு….  குளிச்சிட்டு வண்டி கிட்ட வரும்போது கூப்பிட்டு…  பைக்கை புடிங்கிட்டாங்க. ஏடிஎம்ல பைசா எடுக்க போனாங்க…  போகும்போது போலீஸ் புடிச்சு கேட்டு இருக்காங்க. கேட்டு விசாரிச்சு போட்டோ எடுத்துட்டு போலீஸ் விட்டு இருக்காங்க. போலீஸ் நேராக வந்த உடனே நின்னுட்டு இருந்தாங்க… பேசிட்டு இருந்தோம்… நாலு பேரு தான்  உள்ள இருந்தாங்க. ரெண்டு பேரு மறுபடியும் கீழ இறங்கிட்டாங்க…. வாய்க்கால் தாண்டி போயிட்டாங்க…  அங்க நின்னு பாத்துட்டு இருக்கும் போது… போலீஸ் கிட்ட வந்த உடனே கொஞ்சம் கேப் விட்ட உடனே மேல போங்க என சொன்னாங்க.  நாங்க ஓடி வந்துட்டோம்.  7 மணிக்கு பிடிச்சவங்க… 1 மணிக்கு தான் ஓடி வந்தோம் என தெரிவித்தார்.

 

நெல்லையில் அதிர்ச்சி….! பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்…!!