தமிழகத்தில் உள்ள 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்றம் ,  அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதி அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று RSS சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார். ஒரு அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கும்போது அதை மறுப்பது உரிமையை பாதிக்கும் செயல் என்ற கருத்தை தெரிவித்து அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு 16ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 33 இடங்களில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்த காவல்துறை முறையாக அனுமதி வழங்காமல் தாமதித்த நிலையில் தேதியை கடந்துவிட்டது.

இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.  தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு எதிராகவும்,  அந்தந்த பகுதியில் உள்ள  மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த அனைத்து வழக்குகளும் 33 இடங்களில் அனுமதி கோரிய வழக்குகளும்  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. RSS ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது நீதிபதி ஜெயச்சந்திரன் என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அவர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த விசாரித்த போது நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த அனுமதியும் வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்ற நிலையில்,  இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், RSS ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தங்களுடைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால் ? அந்த நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வர இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி இதுவரை இடைக்கால உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்காத நிலையில்,

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி அனுமதி வழங்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுவதாக தெரிகிறது என்று கூறி இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இருக்க கூடிய தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி நான்கு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.