தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டுக்கான இதழியல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தற்போது அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதன் பிறகு தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

பத்திரிக்கை பணியை முழு நேர பணியாக கொண்டிருப்பதோடு அவரின் எழுத்துக்கள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் இதழியல் விருதுக்கு நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் பெயரிலோ, பணிபுரியும் நிறுவனங்களின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை அவற்றுக்குரிய ஆவணங்களுடன் சேர்த்து இயக்குனர், செய்தி மக்கள் தொடர்பு துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இதழியல் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 30 ஆகும்.